Sunday, May 10, 2009

கருவறைக் கூச்சல்

உணவளிக்கும் உயர்விடமே உயிர் பிரிக்க முந்தியது!
உதவியற்றுத் திறிவதனால் குருதிக்குழாய் சிதறியது!
உடன் பிறவாச் சகோதரனே உடல் பிளக்க முற்பட்டான்!
உரு தெரியா இனவெறியின் உயிர்ப்பசிக்கு முடிவில்லையோ?
கருவறையில் கூச்சலிடும் குரலுனக்குப் புரிகிறதா?
கல்லறைக்குப் போவதற்குள் கண்துடைக்க வாராயோ?
- ஈழத்தமிழன்.

Saturday, January 3, 2009

என்னதான் கிடைக்கும் அமெரிக்காவிற்கு?

கான்டலினா ரைஸ் இந்தியா வருகை, பாகிஸ்தானின் தீவிரவாதத்தை அடக்கி ஆள. மும்பை தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள்தான் காரணம், கண்டுபிடித்தது அமெரிக்காவின் உளவுத்துறை. இதே உளவுத்துறைதான் ஈராக்கில் போர் தொடுக்க 'ஜார்ஜ் புஸ்ஸிற்கு' துப்பு கொடுத்தது. பின்பு அவரே உளவுத்துறையின் தவறான தகவல்தான் ஈராக்கின் அழிவிற்கு காரணம் என்று சொல்லி செறுப்படி வாங்கியது வேறு கதை.

உலகின் எந்த மூலையில் போர் வெடித்தாலும் சமாதானம் செய்ய புறப்படும் இவர்களின் நோக்கம், போருக்கு தேவைப்படும் ஆயுதங்களை விற்பதும், அந்நாடுகளின் வளங்களை சுருட்டிச்செல்வதும்தான். ஈராக் போரே இதற்கு தக்க சான்று.

தற்போதைய வருகையின் காரணம்தான் என்ன?
துப்பு கொடுக்கவோ தீவிரவாதத்தை அழிக்கவோ கண்டிப்பாக இல்லை.
தான் மட்டுமே உலக நாடுகளுக்கெல்லாம் ஒரே எண்ணெய் வியாபாரியாக வேண்டும் என்பது அனைவரும் அறிந்த அமெரிக்காவின் லட்சியம்.

அந்த பேராசையை தீர்துக்கொள்ள இதுதான் நல்ல சந்தர்ப்பம். ஈரானிலிருந்து இந்தியாவிற்கு போடப்படவிருந்த எண்ணெய் குழாய் ஒப்பந்தம் நிறைவேர ஒரே வழி பாகிஸ்தான் சம்மதம்தான். இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்தே இருக்க வேன்டும் என்பது வெரும் அரசியல் காரணம் மட்டும் அல்ல, அதற்கு வேரு சில காரணங்களும் உள்ளன (பின்நாளில் பார்ப்போம்).

ஈராக்கும் ஈரானும் வளரும் நாடுகளுக்கு தன் எண்ணெய் விற்பனையை தொடங்கிவிட்டால் அதன் பொருளாதாரமும், அதிக விலை இல்லாமல் வாங்குவதால் இந்தியாவின் பொருளாதாரமும் உயர்ந்துவிடும்.

அமெரிக்காவின் இந்த அரசியல் சதி புரிந்திருந்தால் இந்தியாவும் பாகிஸ்தானும் என்றோ உயர்வை அடைந்திருக்கும், பொருளாதாரத்திலும் நட்புறவிலும்...

Thursday, December 25, 2008

அங்கீகரிக்க இவர் யார் ?

சென்னையில் எங்கு திரும்பினாலும் பேருந்தும், வண்ண விளக்குகளும் என்ற காலம் முடிந்துவிட்டது. எங்கு பார்த்தாலும் "டிஜிட்டல் பானர்கள்".
ஒரு புறம் விஜயகாந்த் அரசியல் விளம்பரம்,
மறுபுறம் அம்மா அழைக்கிறார்,
தெருவின் ஆரம்பம் முதல் கடைசி வரை கலைஞர் கலக்குரார்.

உணவில்லாமல் உயிரச்சுமையை சுமது செல்லும் இலங்கை தமிழனுக்கு "அங்கிகாரம்" வழங்குகிறார் தொல்.திருமாவளவன்.
திரும்பிய திசையெல்லாம் திருமாவளவனுக்கு பானர்கள்.
இது போராளியின் வடிவங்கள் போல இல்லை, பெண் பார்க்க டெம்ப்ளட் ஆல்பம் போலதான் தெரிந்தன....
தலித் முன்னேற்றத்திற்காக பாடுபடும் கட்சிக்கு எங்கிருந்து வந்தது இந்த திடீர் பணம் ?

இன்றுவரை முழுமையான அரசியல் தீர்வு காண முடியாமல் தவிப்பவர்களுக்கு உணவிர்காவாவது உதவியிருக்கும்.

சக தமிழ் மன்றங்களையே கொன்று குவித்த விடுதலை புலிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் நடத்தும் அங்கீகார மாநாடா ?

தமிழினத்தையே அழிக்க முடிவு செய்துள்ள சிங்கள அரசுக்கு ஆயுத பலம் ஒரு புறம் வழங்கும் இந்திய அரசு.
மறுபுறம் விடுதலை புலிகளை ஆதரித்து பேசும் தமிழினங்கள்.

ஒரு அமைச்சர் பதவிக்காக தில்லி வரை சென்று அன்றே பதவியுடன் திரும்பும் கலைஞருக்கு, தமிழினம் அழிவதில் உண்மையான அக்கரை இருந்தால் ?

அரசியல் தீர்வால் மட்டுமே முடிவு காண முற்பட்டிருந்தால் என்றோ சிங்கள மக்களும் முன்னேரியிருப்பர்கள் .....